
எப்ப மச்சான் வருவீக..?
-‘பரிவை’ சே.குமார்.
அடுத்த தையிக்குள்ள
பரிசம் போடுவேன்னு
அய்யானாரு வாசலிலே
அடிச்சிச் சொன்னியளே…
அதை மறந்து போனியளோ..?
வெத்தலக் கொடியோரம்
வெசனப்பட்டு நிக்கயில
மாருல சாச்சிக்கிட்டு
தைரியம் சொன்னியளே…
அதை மறந்து போனியளோ..?
உங்க நினைவோட
உழுத வயலுக்குள்ள
அழுது நிக்கயில
ஆதரவா அணச்சீங்களே…
அதை மறந்து போனியளோ..?
திருவிழா ராத்திரி
தெருவுல நான் போக
பின்னால நீங்க வந்து
கைபிடித்து நடந்தீங்களே…
அதை மறந்து போனியளோ..?
கொட்டச் செடியோரம்
கொலுசு மாட்டிவிட்டு…
காலில் கோலமிட்டு
குறுகுறுக்க வச்சியளே…
அதை மறந்து போனியளோ..?
சொல்லித் தையி மூணாச்சு…
சொந்தமெல்லாம் கேட்டாச்சு…
வரும் தையில் வருவீங்கன்னு
வசதியாச் சொல்லி வச்சேன்…
உங்கழுத்துல எந்தாலின்னு
உறுதியாச் சொன்னியளே..!
எங்கழுத்து ஏங்கி நிக்கி
எப்ப மச்சான் வருவீக…?
ஜீவா கவிதைகள்
வாசல் திறந்திருந்தும்
வார்த்தைகள்
விரதமிருக்கிறது…..
மெளனங்கள்
நம்மை தாங்கியபடி
உரையாடும் பொழுதுகளில்!!!
நீ இல்லா
பொழுதுகளில்….
உன் நினைவுகளை
என்னிலிருந்து வெளியாக்கி
உயிரற்ற புகையாய்
மாற்றுகிறது……
நீ வெறுக்கும்
என் ஆறாம் விரல்!!!
******************************************
மீட்டிய வீணையில் இருந்து
விரல் எடுத்தபின்பும்
இசை வழிவது போல்
நம் இதயங்கள்
மெளனமாய் பறிமாறிக்கொள்ளும்
முத்தங்களின் ஓசைகள் எல்லாம்
என் நினைவுக் குழிகளுக்குள்
உறங்கிக்கிடகிறது ……..
லயம் மாறாத இச்சுகளுடன்!!!!
********************************************
ஜீவா (6384842078)
கோயம்புத்தூர்
