பாரியன்பன் – கவிதைகள்
*******************************
1.
ஆரம்பத்தில்
எப்படி இருந்தீர்களோ
அப்படித்தான் நானும் இருந்தேன்.
இப்போது நீங்கள்
இப்படி இருப்பதற்கு
ஒருகாரணம் இருப்பதுபோல்;
நான் இப்படி இருப்பதற்கும்
ஒரு காரணம் இருக்கிறது.
ஒருவிதத்தில் நீங்கள்
இப்படி இல்லாமல்
அப்படியே இருந்திருந்தாலும்
நான் இப்படி இருப்பதற்கு
நீங்கள் யாரும்
வருந்தப் போவதில்லை.
நீங்கள் அப்படி இல்லாமல்
இப்படி மாறி இருப்பதற்கு
நான் மட்டுமாவது
வருந்திக் கொள்கிறேன்
உங்களுக்காக…!
2.
தூரத்தில்
பயணப்படும் இருவரும்
எதிரிலிருக்கும் இருக்கையில்
அமர்ந்து சென்றிருக்கலாம்.
இருக்கையில் இளைப்பாராமலும்
கடந்து கொண்டிருக்கலாம்.
இருக்கையும் சூழலும்
சற்று அமரச்சொல்லி இழுக்கிறது
என்னை.
அவ்விருவருக்கும் இச்சூழல்
எப்படி இருந்ததோ தெரியாது.
இருவரும் என் பார்வையின்
எல்லைக்குள்தான்
இருந்து கொண்டிருக்கிறார்கள்.
சுவாரஸ்யம் மிகுதி பட
பதட்டமின்றி
நடந்து கொண்டிருக்கிறார்கள்.
பொதுவான சாலை
பொதுவான மரங்கள்
பொதுவான நிழல்கள்
பொதுவான விளக்குகள்
பொதுவான இருக்கை
என எல்லாமும்
பொதுவாய் இருக்க
அவ்விருவரைப் பற்றிய கவலை
தற்போது எனக்கு வேண்டாம்.
பொதுவான இருக்கையில்
நான் அமர்ந்து சற்றே
இளைப்பாறி கொள்வதில்
அப்படியொன்றும்
பெரிதாய்ப் பிழை
நிகழ்ந்து விடப் போவதில்லை.
– கவிதைகள் ஆக்கம்
* பாரியன்பன்
குடியேற்றம் – 632602
கைப்பேசி ; 9443139353.
பாலென காதல் பொங்கும்

முன் புற மாடி வீட்டின்
முன்றலில் ஓர் இ ளைஞன்
மின் கதிர் பார்வை யாலென்
மீன் விழி துடிக்கச் செய்வான்.
அன் புறப் பார்த் தென் மேனி
அழகினை மாந்து கின்றான்
இன்புறும் மெளன கீதம்
இதயத்தில் மீட்டு கின்றான்.
* * * * * * * * * * * * * * *
கள்ளமாய்ச் சிரிக்கும் போதும்
கதவோரம் நிற்கும் போதும்
உள்மன வீணை மீட்டி
உடலெங்கும் இன்ப. நாதம்
வெள்ளமாய்ப் பெருகும் ‘, மார்பு
விம்மியே தணியும், நெஞ்சில்
முள்ளென ஏதோ ஒன்று
மேல்நின்று கீழ் இ றங்கும்.
* * * * * * * * * * * * * * * * * *
அடிக்கடி கனவு தோன்றும்
ஆயிரம் எண்ணம் மோதும்
துடிக்குமென் இதழ்கள் சொல்ல நாணமோ தடை வி திக்கும்
படிக்காத ப் பாடம் ஒன்று
பன்முறை நெஞ்சில் தோன்றி
அடிக்கடி ஏதோ கூறி
அலையென மோதிச் செல்லும்
* * * * * * * * * * * * * * * * * *
விடிந்ததும் கோலம் போடும்
வேளையும் பொழுது சாய்ந்து
முடிந்ததும் கதவை மூடும்
முன்னிரா வரையும் இங்கே
கடந்திடும் கணம் ஒவ் வொன்றும்
கன்னியின் மனதில் இன்பம்
படிந்திடச் செய்யும் நெஞ்சில்
பாலெனக் காதல் பொங்கும்
* * * * * * * * * * * * * * * * * *
குடந்தை பரிபூரணன்
கும்பகோணம் .