
புது வருடம்
புதுவருடம் மனங்களில் பூத்துக்குலுங்கட்டும்
புது கனவின்
வண்ணங்களில்
வாழ்வு மலரட்டும்
வாசம் உறவுகளில்
நேசமாய் வீசட்டும்
பழைய நாச மோசங்கள்
ஒழியட்டும்
புதிய ஆச பாசங்கள்
பிறக்கட்டும்
வெந்து நொந்த
பாலை மனம்
இனி நந்தவனம்
ஆகட்டும்.
சங்கீதா சுரேஷ்
தர்மபுரி
நினைவுகளின் பயணத்தில்
பயணிக்கிறேன்
சாலையெங்கும் உதிரிப்பூக்களின்
வாசனை பற்றி கடக்கிறேன்
மீண்டுமொருமுறை கிள்ளி பறிக்கும்
உன் ஞாபகம் தொத்தி
நகர்கிறேன்
தனிமையிரவுகளை தள்ளி
போட
முற்பட்டு முடியாமல்
வீழ்கிறேன்
உன் நினைவுகளின் தீவில் ……!!!!
ச. இராஜ்குமார்
திருப்பத்தூர்