
தற்போதை இளம்பெண்கள் தங்கள் கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டும், பல இலட்சங்கள் சம்பாதிக்க வேண்டும். ஐ.டி துறையில் வேலை பார்க்க வேண்டும் என்று பல்வேறு கட்டளைகள் போட பெற்றோர் அதற்கேற்ற வரன்களை தேடி வருகின்றனர். ஆனால் திருவண்ணாமலையில் பொறியியல் படித்த பெண் ஒருவர் மணந்தால் ஒரு விவசாயியைத்தான் மணப்பேன் என்று வித்தியாசமாக அடம்பிடித்து தன் ஆசைப்படி ஒரு விவசாயியை மணந்துள்ளார். அந்த செய்திதான் கீழே
கண்ணமங்கலம்:’விவசாயியைத் தான் திருமணம் செய்வேன்’ என்ற கொள்கையோடு, விவசாயியை தேர்வு செய்து, பெண் இன்ஜினியர் திருமணம் செய்து கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், முனியந்தாங்கலை சேர்ந்தவர், லட்சுமணன் மகள் அரசம்மா, 27; இன்ஜினியரிங் படித்துள்ளார். இவருக்கு, பல இடங்களில் அவரது பெற்றோர் வரன் தேடி வந்தனர். அரசம்மா, ‘நான் ஒரு விவசாயியைத் தான் திருமணம் செய்து கொள்வேன்’ என, தீர்க்கமாக கூறிவிட்டார்.
இதையடுத்து, தேப்பனந்தலில் வசிக்கும் லட்சுமணனின் சகோதரி எல்லம்மாள், 65, தன் மகன் விவசாயியான சிவக்குமார், 29, என்பவருக்கு அரசம்மாவை பெண் கேட்டார். இதையடுத்து, 27-ல், சிவகுமாருக்கும், அரசம்மாவுக்கும் திருமணம் நடந்தது. மகளின் ஆசைப்படி லட்சுமணன், மருமகன் சிவகுமாருக்கு, விவசாய பணிக்காக டிராக்டர் மற்றும் டில்லர் வாங்கி கொடுத்துள்ளார்.
நன்றி: தினமலர் நாளிதழ்.