
நம்ம தலைவரு, கும்பிட்ட கையை கீழே இறக்காம போறாரே!
தேர்தலில் மூக்கு உடைஞ்சதை மறைக்கத்தான்….
பா.சக்தி வேல், கோவை.
*பேருந்தில் பயங்கர மான கூட்டம் . ஒரே வார்த்தையில் கூட்டமே கலைஞ்சு போச்சு அப்படி என்ன வார்த்தை சொன்ன என்ன மாப்ள எப்போ சீனாவுலேர்ந்து வந்தே? வேத புருஷோத்தமன் ஆதிச்சபுரம் 614717*.
“

உலகத்துல இல்லாத தெய்வம் எல்லாம் தலைவருக்கு துணை நிற்குமா எப்படி ?”
” இருக்கற சிலையெல்லாம் தான் அவரு கஸ்டடியில இருக்காம் …
சீர்காழி.ஆர்.சீதாராமன்

” தூதுப் புறாவுக்கு பயிற்சி கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள் மன்னா …”
” போர் ஓலையை போட்டதும் கை நழுவி பறந்து விட்டதா அமைச்சரே ?”
சீர்காழி.ஆர்.சீதாராமன்
என் ஆளைச் ‘சுத்தி வளைச்சுப் பிடிக்க முடியலை’டா!”

“ஏன்டா என்னாச்சு? லவ்வுக்கு ஓக்கே சொல்லலியா?”
“அதில்லடா அவ ‘ரொம்ப குண்டா’ இருக்கா!”
முத்து ஆனந்த், வேலூர்.
“நீ உன் வீட்டுக்காரரை அடிக்கடி ‘பழம், பழம்’ன்னு சொல்றியே! உனக்கு அவர் மேல அவுவளவு அன்பா?!”
“அட அவ ஒருத்தி, அவரு ஒரு ‘பழம்’ விடாம எல்லாப் பழங்களையும் சாப்பிடுவாரு! அதனால அவருக்கு அப்படி ஒரு ‘பேரை’ வச்சேன்!”
முத்து ஆனந்த், வேலூர்.
புலவர்கள் அரசவையில் என்னைப்பற்றி புகழ்ந்து பாடவே

மாட்டேங்கிறாங்களே ஏன் அமைச்சரே..?
அரசவையில் பொய் பேசக்கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறீர்களே அரசே!
எஸ்,எஸ்,பாபு, பஞ்செட்டி.
நம் மன்னருக்குப் பிடித்த உணவு எது சொல் பார்க்கலாம்?
குழிப் பணியாரம்..தான்..!
சின்னசாமி, நத்தம்.

“தலைவரை மிகப் பெரிய சக்தி ன்னு சொன்னது தப்பா போச்சா ஏன் ? “
” எரிபொருளுக்குக்கு பதில் மாற்று சக்தியா அவரை பயன்படுத்த முடியுமான்னு யாரோ கேட்டுட்டாங்களாம் …
சீர்காழி.ஆர்.சீதாராமன்
“

பாத்திரம் கழுவ முதலாளியம்மா வீட்டுக்கு இன்னிக்கு கொஞ்சம் லேட்டா போயிட்டேன்”
” அச்சச்சோ என்னாச்சி?”
.”முதலாளியம்மா கழுவி கழுவி ஊத்திட்டாங்க!””
புது வண்டி ரவீந்திரன்
” ஆபரேஷன் பேஷண்ட் எஸ்கேப் ஆனதும் டாக்டர் என்ன சொன்னார் ?”
” ஹி… ஹி.. ஓடுகாலின்னு தான் ….”
சீர்காழி.ஆர். சீதாராமன்.