கவிதைக் காதலி!
காதல் கவிஞர் வேலூர் முத்து ஆனந்த்
அழியட்டும் கொரோனா
என் உள்ளத்து உணர்வுகளை ஊற்றி
அப்படியே அதனை ரசனைகளாய் மாற்றி
உன்னால் மட்டும் எப்படியடா
இந்தக் காதல் கவிதைகளைப் பேரழகாய்
வடிக்க முடிகிறது?!
மன்மத பாணத்தை ஏவி
என்னை நீ வீழ்த்தியதால்தான்
நான் உன்னேயே நினைத்து
என்னை (யே) மறந்தேனடா!
விதவிதமாய் விந்தைகள் புரியும்
விழிகள் உனக்கு என்றாய்!
ஆனால் – அந்தக் கண்களே
எப்பொழுதும் உன் மீது தானே நிலை குத்தி நிற்கிறது!
என் மீது எவ்வளவு காதல் இருக்கிறதோ
அவ்வளவு பரிவும் உனக்கிருக்கிறதடா!
அதனால்தான் –
கொரோனா அச்சத்திற்காக
முத்தங்களைக்கூட
இதழ்களிலும் கன்னங்களிலும் தராமல்
எனக்குப் பறக்கும் முத்தங்களைக்
காற்றில் அனுப்புகிறாய்!

நீ
ரசித்து ருசித்துப்
புசிக்கும்போதுதான்
தெரிகிறது
நான்கூட எத்தனை அழகான
இனிமையான கவிதையென்று!
அன்றல்ல இன்றல்ல
என்றுமே
என் இதயத்தின் காதல் இளவரசன்
நீ மட்டும்தான் அன்பே!
நன்றி
இடி மின்னல் மழை வெள்ளம்
எது என்றாலும்
எனக்கு அது நீதானடா அன்பே!
அன்பு காட்டுவது எப்படி என்றுகூட
உன்னிடமிருந்துதான்
தெரிந்து கொண்டேன்
இடி போல் பிரமிக்க வைக்க!
திடீர் திடீரென நீ வைக்கும் முத்தங்கள்
எனக்கு மின்னல்களைத்தான்
நினைவுபடுத்துகின்றது!
சிறு தூறலாகத் தொடங்கும் உன் அணைப்பு
கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து
மழையாகிமழையாகி
பின் பெரு வெள்ளமாக மாறி
என்னில் முழுவதுமாய்
அப்படியே இறங்குகிறது!
உன் புன்னகைகள்
குட்டிக் குட்டி வரங்கள் என்றால்
உன் சிரிப்பு எனக்குப் பேரதிர்ஷ்டம்!
நான் நினைத்ததையெல்லாம்
நிறைவேற்றுவதற்காகவே
உன்னை எப்பொழுதும்
முத்த மழையில் நனைய வைக்க வேண்டும்
என்ற கட்டளையை என் மனம்
எனக்கே தெரியாமல்
கடைப்பிடிக்கிறது!
என் மகிழ்ச்சியை எப்பொழுதும்
உச்சத்திற்குக் கொண்டு செல்லும்
சுக்கிரன் நீதான்!
என்னை எப்பொழுதும் ஆட்சி செய்யும்
சக்கரவர்த்தியும் நீதான்!
நம்மை ஆண்ட ஆள்கிற
ஆளப் போகிற
காதலுக்கு என்றென்றும்
ப்ரியமான நன்றி!

அந்தப்புரம்!
நேரில் மட்டுமல்லகனவுகளிலும் கற்பனைகளிலும்கூட
உன்னைப் பார்ப்பது எனக்கு வரம்தானடா!
கலையான சிற்பம்அழகான ஓவியம்
எதைக் கண்டாலும்அதில் நீதான்
மின்னுகிறாய்! மிளிர்கிறாய்!
ஜொலிக்கிறாய்!பளபளக்கிறாய்!
உன்னைப் பற்றியஎன்னுடைய கிறுக்கல்களுக்குக்கூட
கவிதைகள் என்று பெயர் வைக்கிறார்கள்!
கனிச் சாறுகள் கூடக் கசக்கிறது
உன் இதழ்களின் சுவையின் முன்னே!
எப்பொழுதும் எல்லாமாக இருக்க
உன்னால் மட்டும் எப்படியடா முடிகிறது?!
உன்னைக் காதலித்த பின்தான்அழகானேன் என்று
நம் காதல்கூடக் கவிதையுரைக்கிறது!
இந்தப்புறம் அந்தப்புறம் என்றில்லை
நீ இருக்கும் இடம் எதுவானாலும்அது எனக்குநம் அந்தப்புரம்தான்!
முழுவதுமாய் நீ என்னை ஆட்கொள்ளும்போதுதான்
காதல் அத்தனை அழகையும்அள்ளிக் கொள்ளும் என்று தெரிகிறது!
பார்ப்பது புன்னகைப்பது பழகுவது
பேசுவது முத்தமிடுவது ஆள்வது
எனஎல்லாவற்றையும் தனதாக்கிக் கொண்டு
சிறப்பான ஆட்சியைத்தான்
நடத்துகிறது இந்தக் காதல்!
