சின்ன சின்ன குறிப்புகள்!
சொத்தைப் பல் உள்ளவர்கள் கிராம்பை தூள் செய்து கொண்ட பின் கற்பூரத்தையும் சிறிது சேர்த்து சில துளிகள் துளசிச் சாறில் குழைத்து சொத்தை பல்லின் மீது பூசி வந்தால் பல் வலி குறையும்.
சிறு குழந்தைகள் மண்ணில் விளையாடி விட்டு அப்படியே விரல் சூப்பும் இதனால் கிருமிகள் தொற்றும் வயிற்றில் பூச்சிகள் உண்டாகும். இந்த பூச்சிகளை ஒழிக்க வசம்புவை வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும் இந்த பொடியை தேனில் குழைத்து கொடுத்து வர குழந்தைகள் மலம் கழிக்கையில் பூச்சிகள் வெளியேறிவிடும்
.
கடலைமாவு, அரிசி மாவு, கோதுமை மாவு இவற்றில் வண்டுகள் வராமல் இருக்க உப்புத் தூளை சிறு துணியில் முடிந்து போட்டு வைக்கலாம்.
செருப்பு ஷூ போன்றவை மழையில் நனைந்து ஈரமாகிவிட்டால் கழற்றி வைக்கையில் நியுஸ் பேப்பரை அதில் திணித்து வையுங்கள். நியூஸ் பேப்பர் ஈரம் உறிஞ்சியவுடம் வெயிலில் காய வைத்து சிறிது டால்கம் பவுடரை தூவி வைத்தால் துர்நாற்றம் வராது.
மூட்டு வலி உள்ளவர்கள் தினமும் பாலில் மஞ்சள்தூள், சுக்குத்தூள் சிறிதளவு போட்டு குடித்துவர மூட்டுவலி குணமாகும்.
மாதவிடாய் வயிற்றுவலி பிரச்சனை உள்ளவர்கள் மாதவிடாய் ஆவதற்கு ஒருவாரம் முன்பிருந்து தினமும் காலையில் வெறும்வயிற்றில் வெந்தயத்தை தண்ணீருடன் சேர்த்து விழுங்கினால் வயிற்றுவலி பிரச்சனை வராது,
சிங்கில் பாத்திரங்களை தேய்க்கும் போது நாளடைவில் அந்த இடம் சொரசொரப்பாகிவிடும். இதை தவிர்க்க அங்கு ரப்பர் ஷீட் போட்டு அதன் மீது பாத்திரங்களை வைத்து துலக்கினால் சத்தமும் வராது. இடமும் தேயாது.
சப்பாத்தி மிருதுவாக இருக்க மாவு பிசையும் போது மஞ்சள் வாழைப்பழத்தை சேர்த்து பிசையவும். சப்பாத்தி மிருதுவாக இருப்பதுடன் சுவையாகவும் இருக்கும்.