உறங்கா இரவுகளில்
ஜன்னலுக்கு வெளியே நிலா
காவலெனவும், காதலெனவும்…
– வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்
எந்த மேகத்திலிருந்து
கசியுமோ
முதல் துளி…
– வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

நீரில் மிதக்கும் பூக்கள்
நதியில் கரைகிறது
இறப்பின் துயரம்
ச.கோபிநாத் சேலம்
அமைதியான நதியில்
மெல்ல நகரும் படகு
வேடிக்கை பார்க்கிறது குருவி!
ச.கோபிநாத் சேலம்
அடித்து அடித்து எழுதியும்
கண்ணீர் சிந்திடவில்லை
காகிதம்!
அ.வேளாங்கண்ணி
தூர விலகி கலைத்துப் போட்டது
ஜன்னல் வரைந்த ஓவியத்தை
சூரியன்!
அ.வேளாங்கண்ணி
கடனெடுத்து கட்டிய வீடு,
புதிதாக குடிவந்திருக்கிறார்கள்;
நடுத்தெருவுக்கு!
நல்ல மழை,
நிரம்பி வழிகிறது குளம்;
தவளைகள் சத்தத்தால்!
கூழாங்கல்லின் அடியில்
படபடக்கிறது
சுதந்திர தின கவிதை…
ஐ.தர்மசிங்
விவசாயியின் வறுமை
அரிசியாக மாறுகிறது
விதை நெற்கள்…
ஐ.தர்மசிங்
மவுனப்பொழுது!
முள்ளாய் குத்துகிறது!
கடிகாரத்தின் ஓசை!
தளிர் சுரேஷ்.
உருப்போட்டு முடித்ததும்
சில்லறை விழுகிறது!
நடைபாதை ஓவியன்!
தளிர் சுரேஷ்.
வெண்மேகம்
காளான் குடையானது
இலையுதிர்ந்த மரத்தின்மேல்
சா.கா.பாரதி ராஜா,
தூண்டிலைக் கடித்துக் கொண்டே
கரையேறாமல் நீந்துகிறது
வானில் பட்டம்
சா.கா.பாரதி ராஜா,
ஹைக்கூ சிறப்பிதழ் |
தாயின் புதைகுழி
தொட்டுத் தொட்டுப் பார்க்கிறேன்
பூத்திருக்கும் செடி…
எறும்பு தவறி விழுந்ததும் /
ஆகாயம் கலங்குகிறது /
கிணற்றுக்குள் தவளை
எம்.ஜெகன் ஆண்டனி.
சிதிலமடைந்த சிலை/
பாதுகாப்பாக இருக்கிறது/
பறவையின் குடும்பம்
-சாண்டில்யன் விவேகானந்தன்
குறும்பா கூடம்! |
தரையில் காலூன்றும்/
நம்பிக்கையில் தொங்குகின்றன/
ஆலம் விழுதுகள்
-சாண்டில்யன் விவேகானந்தன்
சுவரேறிய எறும்பு
கிணற்று நீரில் தத்தளிக்கிறது
ஒற்றை இலை.
கவி நிலா மோகன்.
குடமுழுக்கு நடக்கின்ற
கோயிலுக்கு அருகில்
கூரையில்லாப் பள்ளிக்கூடம்
ஸ்ரீநிவாஸ் பிரபு கவிதைகள் |
தேநீர் குவளையில்
பூக்களைச் சேமித்தேன்
பட்டாம்பூச்சிகளின் வருகை
….
- திடீர் மழை
ஒதுங்கி நிற்க
குடைபிடிக்கிறது கோயில் மணி
- ஈ பறந்து போகிறது
தேனீர் கோப்பை விளிம்பில்
காலடிக் கோடு
- கடந்து போன பிச்சைக்காரன்
கூடவே வருகிறான்
முகத்தில் பசி வரிகள்
- தோன்றி மறையும் நேரத்துள்
பால்யம் கூட்டிச் சென்று திருப்புகிறது
வல்லமை வாய்ந்த வானவில்
தொடர்வண்டியில்
எனை ஏற்றிவிட்டு
எதிர்காற்றை கிழித்தபடி
தொடர்ந்து ஓடிவரும்
உன் காலடித் தடங்கள்
சொல்லாமல் சொல்லிப்போகிறது
என் மீதான உன் ப்ரியங்களை!
– தனுஜா ஜெயராமன்.
வெள்ளம் வடிந்த
ஆற்றின் படித்துறையில்
பறவைகளில் கால்தடங்கள்!
-ஹைக்கூ உமா
ஏரியில் மீன்பிடிக்க
மணம் வீசுகிறது
கரையில் பூத்த தாழம்பூ.
Ji. அன்பழகன்.
பூ விழுந்ததால்
தலை விழுந்தது
ரவுடி சுண்டிய நாணயம்
புது வண்டி ரவீந்திரன்
இங்குமங்குமாய் ஒரு எறும்பு
பிடிபடாமல் ஆடிக் கொண்டிருக்கிறது
இலையின் நிழல்
– கி.கவியரசன்
பயமுறுத்தும்
சோளக்கொல்லை பொம்மை
வட்டமடிக்கும் பட்டாம்பூச்சி.!ஜவஹர்.ப்ரேம்குமார். பெரியகுளம்