கொரானா!
அடுத்தது என்ன?

#corona_Antigen_test டாக்டர் சில்வியா ப்ளாத்.
இன்னைக்கு நிறைய பேர் கிட்ட இருக்குற கேள்வி இது தான். கொரானா இன்று அனைத்து மாவட்டங்களிலும் பாசிடிவ் என்று தகவல்கள் வந்துள்ளன.
மதுரை மற்றும் நான்கு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கேள்விக்கு பதிலாகத் தோன்றியது தான் இந்தக் கட்டுரையில் கொடுத்து உள்ளேன்.
சென்ற வாரம் ICMR ஆராய்ச்சி ஒன்று செய்தி சேனல்களில் அடிபட்டு அந்த செய்தி திரும்ப நாங்கள் அப்படி சொல்ல வில்லை என்று வாபஸ் வாங்கப் பட்டது. அந்த செய்தி என்ன என்றால் ICMR இந்தியா முழுவதும் செய்த ஆராய்ச்சி முடிவுகள் காட்டுவது என்ன என்றால் இந்த நேரத்தில் இந்தியாவில் ஏழு லட்சம் கொரானா நோயாளிகள் இருக்க வேண்டும் என்பது தான். இந்த செய்தி வைரல் ஆனது தொடர்ந்து இது வாபஸ் பெறப்பட்டது.
உண்மையில் இந்த ஆராய்ச்சி என்ன சொன்னது என்று விரிவாக படித்ததின் சுருக்கம். ICMR இந்தியா முழுவதும் மொத்தம் 69 மாவட்டங்களில் உள்ள மக்கள் இந்த கொரானா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்களா என்று random இரத்த மாதிரியை எடுத்து Antibody பரிசோதனைகள் செய்து இருக்காங்க இதில் 0.73% ஆட்களுக்கு இரத்தத்தில் கொரானாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி இரத்தத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதை இந்தியா முழுவதும் உள்ளவர்களுக்கு அப்ளை செய்து பார்த்தால் இந்தியா முழுவதும் இந்த நேரத்தில் ஏழு லட்சம் பேருக்கு இந்த கொரானா தாக்குதல் வந்து சென்று இருக்க வேண்டும் என்று கணிக்கப்பட்டது.
எனவே இந்த நோயை விரைந்து அடையாளம் காண வழக்கமாக எடுக்கப்படும் பரிசோதனைகள் மட்டும் போதாது அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும் போது தான் ரேபிட் கிட் பரிசோதனைகள் வேண்டும் என்று கூறப்பட்டது. ஏற்கனவே சீனாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட ரேபிட் கிட் பரிசோதனைகள் முடிவுகள் தவறாக இருந்த காரணத்தால் கைவிடப் பட்ட நிலையில் AIIIMS உதவியுடன் இந்தியாவில் உள்ள Biotechnology நிறுவனத்தில் மீண்டும் ரேபிட் கிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த தடவை Antibody க்கு பதில் Antigen வைத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. Antibody – கொரானாவுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தி. Antigen – கொரானா வைரஸ் மூலக்கூறுகளில் சில பகுதிகள் இருக்கிறதா என்று கண்டறிதல்.
இந்த rapid kit Antigen detection test வெற்றிக்கரமாக பரிசோதனைகள் செய்யப்பட்டு தற்போது டெல்லியில் மக்களுக்கு பரிசோதனைகள் செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது. முதல் நாளில் 7000 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 450 பேருக்கு பாசிடிவ் என்று வந்து உள்ளது.
இந்த பரிசோதனையின் பயன்கள்.
1)செய்வது எளிது. இரத்த சர்க்கரை அளவு பார்க்கும் மாதிரி ஒரு துளி இரத்தம் மட்டுமே தேவை
2)30 நிமிடங்களில் முடிவுக்கு வர முடியும்.
3) highly specific – இது பாசிடிவ் என்றால் பாசிடிவ் தான். அடுத்த கட்ட RT PCR பரிசோதனை செய்யத் தேவை இல்லை.
4) ஒரே நேரத்தில் இலட்சம் பேருக்கு மேலாக பரிசோதனைகள் மேற்கொள்ள உதவியாக இருக்கும்.
5)இந்த மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கண்டறிந்தவர்களை தனிமைப்படுத்துவதின் மூலம் நோய் பரவலை எளிதாக கட்டுப்படுத்த முடியும்
இந்த பரிசோதனை நெகடிவ் ஆனால் கொரானா அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் RT PCR swab டெஸ்ட் பண்ண வேண்டும். ஏனெனில் இந்த Antigen test ல false negative வர வாய்ப்பு உள்ளது.
ICMR எழுபது லட்சம் பரிசோதனை கிட் இன்னும் பத்து நாட்களில் தயராகி விடும் என்று கூறி உள்ளது. தற்போது இரண்டு லட்சம் கிட் இருக்கிறது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சென்னை மற்றும் நான்கு மாவட்டங்களில் இந்த லாக் டவுன் அமலில் இருக்கும் இந்த நேரத்தில் Secondary prevention நடவடிக்கைகளான early diagnosis and treatment என்று அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து இந்த பரிசோதனைகள் மூலம் mass screening க்கு நகர்ந்தால் இந்த கொரானா பரவல் கட்டுக்குள் வைக்கும் வாய்ப்பு உள்ளது.