கோவை. நா.கி. பிரசாத் கவிதைகள்!

நின்றுபோன வாகனத்தில்
விரைகிறது
எரிபொருள் விலை!
சுவர் பிடித்து
எழுந்து நிற்கிறது
நிழல்!
சமரசம் பேச
சாமரம் வீசும் யானை
காதருகே எறும்பு!
கொடூர விலங்குகள்
அழிந்து வர
அச்சத்தில் காடு!
அச்சுஅசல் மாறவேயில்லை
அடுத்தவர் படைப்பில்
வெளியான புத்தகம்!
வானவில் மழை
சாயம் போகும்
குடைக்கடை!
அடுத்தவர் தடம் பதிக்க
அமோக வெற்றி
செருப்புக்கடை!
பிறர் காலை பிடித்ததில்
மூக்குடைந்து போனது
முள்!
குடும்ப ரத்தம்
குடிக்கும் அட்டை
குடிகார அப்பன்!
சரியான சட்டமின்றி
மாட்டி வைக்கப்படுகிறது
சாதாரண மக்கள்
புகைப்படமாய்