ஜவஹர் ப்ரேம்குமார் கவிதைகள்!

1.
பாசம் உடுத்திய
தண்ணீருக்கு மேல் நனையாத..
அல்லிமலர்..!
#2.
புழுதி போர்த்திய
சாலை எங்கும் உதிர்ந்த
சருகுகள்..!
#3.
ஆபரணம் அணிந்த குழந்தை.. வலியுடன் தொட்டுப் பார்க்கும்
காதுகளை..!
#4.
அலை ஆடையெங்கும்
மொய்த்து ஊர்கின்றன
கட்டுமரங்கள்..!
#5.
உடுத்திய ஆடைகளை
ஊதிக்களைகிறாள் அடுப்படியில்
பொங்கும் பாலில்..!
தேங்கிய தண்ணீரில்
அசையவே இல்லை!
நினைவுகள்!