ஜி. அன்பழகன் கவிதைகள்!

01
கட்டடங்களுக்கு நடுவே
எதிரொலித்து ஓய்கிறது
குயிலின் பாட்டு.
02
அலைபேசி கோபுரத்தில்
ஏறி இறங்குகிறது
பசியெடுத்த பாம்பு.
03
சத்தமிடும் தவளை
விடியல் நோக்கி நகருகிறது
நனைந்த இரவு.
04
குளத்தை வரைத்ததும்
தூரிகைக்கு ஓய்வளிக்கின்றன
ஆழம்போன மீன்கள்.
05
பாலருந்த முடியாது
படுக்கையில் கிடக்கிறது
வைக்கோல் கன்று.