இருமல்

ஒருபக்க கதை : மலர்மதி
ஓவியம்: அ. செந்தில் குமார்
ஆள் அரவமற்ற சாலையில் அவள் தனியாக நடந்து சென்றுக் கொண்டிருந்தாள்.
சாலையோரம் அரட்டை அடித்துக்கொண்டிருந்த அந்த நால்வரின் காமப் பார்வையில் எக்குத்தப்பாய்ச் சிக்கினாள்.
“மச்சி… செம ஃபிகருடா!”
“என்ன சொல்றே?”
“வேறென்ன சொல்ல? வழக்கம்போல் விருந்துதான்!”
பைக்குகளை எடுத்துக்கொண்டு அவளை வட்டமடித்தனர்.
மிரண்டு போனாள்.
அவளை ‘அ

லேக்’காகத் தூக்கிக்கொண்டு அருகிலிருந்த சவுக்குத் தோப்புக்குள் நுழைந்தனர்.
“தயவு செஞ்சு என்னை விட்ருங்க. ப்ளீஸ்… என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்க…” – கெஞ்சினாள்.
அவர்களில் ஒருவன் அவளை நெருங்கினான்.
திடீரென்று –
வழக்கமாய் பயமோ, பீதியோ ஏற்படும்போது உண்டாகும் தொடர் இருமல் உண்டாயிற்று அவளுக்கு.
“லொக்கு… லொக்கு… லொக்கு…” – அடக்கமுடியாமல் தொடர்ந்து இருமினாள்.
“டேய்… இவளுக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருக்குடா…” என்று ஒருவன் கத்த, அவர்கள் மின்னல் வேகத்தில் மறைந்து போனார்கள்.
நிம்மதியுடன் எழுந்து வேகமாய் நடக்க ஆரம்பித்தாள் அவள்.