மனைவி : ஏன்யா.. நான் கொடுத்த சாப்பாட்டை ‘மூடி’ வெச்சுட்டே?
கணவன் :நீ தான் கொடுக்கும் போதே, ‘ மூடிட்டு.’ சாப்பிடுன்னு சொன்னே, எப்படி சாப்பிடறது?
இந்து குமரப்பன். விழுப்புரம்.

மந்திரி :படை எடுத்து வந்த எதிரி நாட்டு மன்னனை எப்படி விரட்டி அடித்தீர்கள் மன்னா?
மன்னர் :கொரோனோ பாதித்த அந்தப்புர அழகிகளை அவன் கிட்டே நிறுத்தினேன் மந்திரியாரே..!
இந்து குமரப்பன், விழுப்புரம்

.
” போர்க்களத்தில் மன்னர் பசியோடு இருக்கிறார் போல! “
” ஏன்? “
” வீரர்களை வீறுகொண்டு வாருங்கள் என்பதற்கு பதிலாக ‘சோறுகொண்டு வாருங்கள்’ என்கிறாரே! “
திருப்பூர் சாரதி

” சரியான நேரத்துக்கு வந்துட்டீங்க, கொஞ்சம் லேட்டாயிருந்தாலும்…”
” ஐயோ டாக்டர்! “
” கிளீனிக்கை பூட்டியிருப்பேன்னு சொல்லவந்தேன்! “
திருப்பூர் சாரதி

“என்னடா…. மண்டையா இதுக்கு முன்னாடி என்ன வேலை செஞ்சிகிட்டு இருந்த…?”*
*”பழனி ,திருப்பதி திருத்தணியில ஸ்டெப் கட்டிங் வெட்டிக் கிட்டிருந்தேன் ….!”*
*”அங்க மொட்டை தான்டா…. அடிப்பாங்க ..?”*
*”இல்லண்ணே… அங்க இருக்குற ஸ்டெப்பிலே உட்கார்ந்து முடி வெட்டிகிட்டு இருந்தேன்…!”*
உமா புருஷோத்தமன், ஆதிச்ச புரம்

” ஹீரோ முதல்ல ரொம்ப நசுங்கின தட்டோட முகத்தை காட்டறாரே ஏன் ?”
” கதை அடி தட்டு மக்களின் சப்ஜெட்டாம் …..”
– சீர்காழி . ஆர். சீதாராமன் .

“அந்த டாக்டர் ரொம்ப மோசமா எப்படி ?”
” புதுசா வந்த பேஷண்ட் கிட்ட லாக் டவுன் டெஸ்ட் எடுக்க சொல்றாரே …..”
சீர்காழி.ஆர்.சீதாராமன்.