
கொஞ்சம்
ஈஸ்ட் கலந்துவிட
உப்பித்தொலைந்துவிட்டேன்
நான்..
பாம்பென்னை வஞ்சிக்க
வேண்டுமென்றே
தொலைந்து போகிறேன்
என் விலாவின்
அழுகிய
தசையுடன்..
என்னைத் தீண்டிய பாம்பின்
நஞ்சு
யாருடைய குதிங்காலை முறித்ததோ அந்தக்கால்களிலோர்
பட்டாம்பூச்சி கிரீடம்..
அழுகிய என்
மார்பின் தசைகளை
உம் அழகிய மார்பின்
தசை மூலம் மூடிவிட
மூன்று முழுமையான
நாட்கள்
கல்லறைகளில் வாயிலில்
ஊற்றி வார்த்திட வேண்டுமோ..
மௌனத்தின்
பிரிதொரு மொழியில்
இழப்பில்லா மரணம்
வழக்கமில்லா பாணியில்
நிறைவேற வேண்டுமோ..
கண்ணுக்குக்ண்
பல்லுக்குப்பல்லென
உயிரீந்த உட்பொருள்
நல்கிய சட்டத்தின்படி
நான் துளிர்க்கிறேன்
என் மேசியாவின்
தோட்டத்து
முள்ளில்லா ரோஜாவென
ஈஸ்ட்டின்
புளிப்பில்லா
திராட்சையின் சுகந்த ரசத்தினால்.. குவளை தூய நீராக்கப்பட்ட
கசடு நீங்கிய நான்..
ஆர் ஜவஹர் பிரேம்குமார்,
பெரியகுளம்.
பாதை எங்கும்/
ஓடுகிறேன்.. என்னை/
வழிமறித்து கவிதை தருகிறது/
நானெறிந்த சொற்கள்..!
ஆர் ஜவஹர் பிரேம்குமார்,
பெரியகுளம்.