
(சுழற்சி)
—————-
பட்டி ஆடு விற்று
பட்டப் படிப்பு
படிக்க வைத்த
அப்பாவை
கடைசியில்
கஞ்சி ஊற்றி
காப்பாற்ற
பத்து ஆடு
மேய்க்கும் வேலை
எனக்கு
(யார் தெய்வம் )
—————————
எல்லா தெய்வங்களையும்
தனக்கு துணை இருக்க
வேண்டிக்கொண்டான்
பெற்றவர்களை
முதியோர் இல்லத்தில்
விட்டவன்
கல்யாணமந்தை, தா.சரவணன்,