.jpg/:/rs=w:1280)
பாண்டவ மகள்… #சுதானு
ரமேஷ், சென்னை
…பாண்டவருக்கு மகள் இருக்கும் விஷயம் சிலருக்காவது தெரிந்திருக்கிறது.
மகாபாரதம் உலகின் பெரிய காவியம் ஆகும் அதில் பல கதைகள் உண்டு. தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படும் தொடர்கள் பாண்டவரை மையமாக வைத்தே எடுக்கப்படுகின்றன. அதில் வரும் உபகதைகள் ஒளிபரப்பப்படுவதில்லை . அவ்வாறே பாண்டவ மகளின் கதை ஒரு உப கதையாகவும் நாட்டுப்புற கதையாகவும் உள்ளது.
🌼பாண்டவர்கள் :
சந்திர வம்ச அரசன் பாண்டுவின் ஐந்து புதல்வர்களே கூட்டாக பாண்டவர் என அறியப்படுகின்றனர்.
🌼திரௌபதி :
ஐந்து பாண்டவருக்கும் பொதுவான பத்தினி ஆவாள். திரௌபதியை தவிர பாண்டவருக்கு வேறு மனைவிகளும் உண்டு.
🌼உபபாண்டவர்:
பாண்டவர்களுக்கு திரௌபதி மூலம் பிறந்த ஐந்து ஆண் குழந்தைகள் உபபாண்டவர் என அறியப்படுகின்றனர்.
🌼பாண்டவர் மகள் :

🌻திரௌபதி மற்றும் யுதிஷ்டிரன் இருவருக்கும் #சுதானு என்ற மகளும் பிரதிவிந்தியன் என்ற மகனும் பிறந்தனர். இந்த சுதானு தான் பாண்டவர் வம்சத்தின் மூத்த குழந்தை ஆவார். அதாவது உபபாண்டவரின் #சகோதரி தான் இந்த சுதானு.
தாய் திரௌபதி போல அழகும் அறிவும், தந்தை யுதிஷ்டிரன் போல தர்மமும் வீரமும் உடையவள் தான் இந்த சுதானு.
பிறகு
🌻பீமனுக்கும் திரௌபதிக்கும் சுதசோமனும்
🌻அர்ஜுனனுக்கும் திரௌபதிக்கும் ஸ்ருதகர்மன் பிறந்தான்.
🌻நகுலனுக்கும் திரௌபதிக்கும் சதாநிகனும்
🌻சகாதேவனுக்கும் திரௌபதிக்கும் ஸ்ருதசேனனும் பிறந்தனர்.
உபபாண்டவர் அனைவர்மீதும் பாரபட்சம் இன்றி அன்பை பொழிந்தாள் சுதானு. சூதாட்டத்தில் நாட்டை இழந்த பாண்டவர் வனவாசம் சென்ற போது தாத்தா துருபதனின் மாளிகையில் பாண்டவரின் குழந்தைகள் அனைவரும் தங்கினர். எனவே அங்கு தாய்மாமன் மற்றும் அத்தையின் அன்பில் வளர்ந்த செல்ல மகள் தான் சுதானு. குருஷேத்திரப் போர் முடிந்த பிறகு பாண்டவரின் மகன்கள் அனைவரும் உறங்கும் போது அஸ்வத்தாமனால் கொல்லப்படுகின்றனர்.
பாண்டவ வம்சத்தில் மிச்சமிருந்தது சுதானு மட்டுமே.
💐இந்த சுதானுவானவள் கிருஷ்ணன் மற்றும் #சத்யபாமாவின் மூத்த மகன் #பானு வை காதலித்து அனைவரது சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு #வஜ்ரம் என்ற மகன் பிறக்கிறான்.
சிலரோ குருஷேத்திரப் போருக்கு பிறகு தான் இவரது திருமணம் நடந்ததாக கூறுகின்றனர். ஆனால் உபபாண்டவரின் அக்கா என்பதால் இவரது திருமணம் உபபாண்டவரின் திருமணத்திற்கு முன்பே நடந்திருக்கவேண்டும்.
திருமணத்திற்கு பின்னர் சுதானு துவாரகையில் வசிக்க ஆரம்பிக்கிறாள்.
💐கிருஷ்ணன் #ஜாம்பவதி இணையரின் மகனான #சாம்பனை மணந்த துரியோதனனின் மகள் லட்சுமணாவும் #துவாரகையின்_மருமகள் ஆவாள்.
தந்தையரை போல விரோதம் பாராமல், சுதானுவும் லட்சுமணாவும் அன்பாகவே வாழ்ந்தனர்.
🌼காந்தாரியின் சாபத்தால் துவாரகை அழியும் நேரத்தில் துவாரகையின் அனைத்து பெண்களும் குழந்தைகளும், அர்ஜுனன் மூலமாக ஹஸ்தினாபுரத்தை அடைகின்றனர்.
சுதானு தனது கடைசி காலத்தை அங்கே கழிக்கிறார்.
பாண்டவர்களுக்கு ஒரு சகோதிரியும் இருந்திருக்கிறார்
குந்திக்கு
4 பிள்ளைகள் அதாவது தர்மர் பீமன் அர்ச்சுனன் கடைசியில் உண்மை வெளியில் வந்தது கர்ணன்.
மாத்திரா தேவிக்கு
3 பிள்ளைகள் நகுலன், சகாதேவன், இறுதியில் பாண்டு மாத்திரா தேவியை கூடிக்கலந்தபோது தான் பாண்டு இறந்தார். மாத்திரி உடன்கட்டை ஏறியதும் இவர்களின் அஸ்தி கடலில் விட்டனர். கண்ணனின் கருணையால் பாண்டுவின் விந்து மாத்திரி உடலில் இருந்ததால் உடன்கட்டை ஏறியும் அந்த விந்து தீயிலும் எதுவுமாகாமல் அஸ்தி கடலில் கலக்கும் போது கடலில் உள்ள சங்கில் தங்கியது. அந்த சங்கில் இருந்து பிறந்தவள் தான் சங்குவதி என்ற பெண். இந்த பெண் பாண்டவர்களுக்கு தங்கையாவாள். அர்ச்சுனன் போரில் வெற்றி பெற 5 பொருட்கள் தேவைப்பட்டன. அவை:
1. வீரப்பம்பை
2. வீரசாட்டி
3.வீரகந்தம்
4. பண்டாரப்பெட்டி
5. வீரவாள்.
இவை அனைத்தும் ஒருவனிடத்தில் தான் உள்ளது என்றார் கண்ணன். இவை அனைத்தும் யாரிடம் உள்ளது அர்ச்சுனன் கேட்க போத்தலிங்கம் என்பவனிடத்தில் உள்ளது என்று கண்ணன் கூறினார். இதை எப்படி வாங்குவது என்று அர்ச்சுனன் கேட்க இதை தந்திரத்தால்தான் வாங்க முடியும் என்று கண்ணன் கூறினார். இதில் கண்ணன் கூறிய வழி வீமன் விறகு விற்பவனாகவும், அர்ச்சுனன் அழகிய பெண்ணாக விஜயாம்பாள் என்ற பெயருடன் மற்றும் கண்ணன் விஜயாம்பாளுக்கு தாய்கிழவியாக போத்தலிங்கம் உள்ள நாட்டிற்கு சென்றனர். வீமன் விறகு விற்பவனாக சென்று கொண்டிருக்க விஜயாம்பாள் தன் அண்ணனை தேடிக்கொண்டு போக அச்சமயம் போத்தலிங்கம் விஜயாம்பாளை கண்டு அவள்மீது மோகம் கொண்டான். என் அண்ணன் விறகு விற்றகொண்டு இந்த வழியாக வந்ததை பார்த்தீர்களா என்று விஜயாம்பாள் கேட்க அழள் பேச்சிலும் அழகிலும் மயங்கினான் போத்தலிங்கம். உனக்காக எதை வேண்டுமானாலும் கொடுக்கிறேன் என்னை மணந்துக்கொள் என்று கூறினான். அந்த சமயத்தில் அந்த பெண்ணிற்கு தாய் கிழவியாக வந்தார் கண்ணன். அப்போது விஜயாம்பாள் என் பாட்டி என்ன கேட்கிறாரோ அதை தந்தால் நான் தங்களை மணப்பேன் என்று கூறினாள். 1. வீரப்பம்பை
2. வீரசாட்டி
3.வீரகந்தம்
4. பண்டாரப்பெட்டி
5. வீரவாள்.
இவைகள் நாங்கள் பூஜை செய்வதற்கு தேவைப்படுகிறது. இவைகளை கொடுத்தால் நாங்கள் இருவரும் பூஜை முந்ததும் தருகிறோம் என்று தாய்க்கிழவி சொல்ல போத்தலிங்கம் கொடுத்தார். நாங்கள் பூஜை செய்வதை யாரும் பார்க்க கூடாது என்று தாய்கிழவி கண்டிப்புடன் போத்தலிங்கமிடம் கூறினாள். அதற்கு சம்மதித்த போத்தலிங்கம் சற்று பொறுமை காத்தான். சற்று நேரம் கழித்து பார்த்தபோது பூஜை செய்தவர்கள் காணவில்லை. போத்தலிங்கம் விஜயம்பாள் விஜயாம்பாள் என்று புலம்பி கொண்டு ஒவ்வொரு நாட்டிலும் தேடினான். இறுதியில் அவர்கள் இருக்கும் நாட்டில் கண்டுபிடித்தப்பின் கண்ணன் நாங்கள் உன்னிடம் இந்த 5 பொருட்களை வாங்கவே வந்தோம் என்று நடந்த உண்மையை கூறி விளக்கினார். அதற்கு பின்பும் போத்தலிங்கம் விஜயாம்பாள் விஜயாம்பாள் என்றான். அதற்கு கண்ணன் சங்கு துவாரகையில் பாண்டுவிற்கும் மாத்ராதேவிக்கும் பிறந்த பெண் பாண்டவர்களின் தங்கையான சங்குவதி இருக்கிறாள் அவளை மணந்துக்கொள் என்று கண்ணன் கூறினார். அன்றுதான் பாண்டவர்களுக்கு தங்கை இருப்பது தெரியும். போத்தலிங்கம் சங்குவதியை மணந்தார். பின்பு போர்க்களத்தில் போத்தலிங்கம் முன்னிருக்கும் பிள்ளையாக போர்மன்னனாக இருக்கவேண்டும் என்று கண்ணன் கூறினார்.