எதிர்வீட்டு வாசலில்
அந்த பூம் பூம் மாட்டுக்காரன்
மாட்டிடம் இப்படி
கேட்டுக் கொண்டிருந்தான்….
அம்மாவுக்கு
நல்ல காலம் பொறக்குமா…?
என ஆரம்பித்து
அம்மா புது வேட்டி சட்ட…
பணம் கொடுப்பாங்களா…?
இப்படிக்கேட்ட அஞ்சாறு
கேள்விக்கும் அசராமல்
தலையாட்டியது மாடு….
எல்லாம் கிடைத்து விட்டது_
போன்ற திருப்தியில்
எதிர் வீட்டுக்காரி
இருந்தை அள்ளிக் கொடுத்தாள்….
ஒரு வகையில்
பூம்..பூம் ..மாடும்
சில குடும்பங்களும்
ஒன்றுதான்….
அவள்
சொல்லும் போதெல்லாம்
அவன் தலையாட்டுவதும்…
அவன்
சொல்லும் போதெல்லாம்
அவள் தலையாட்டுவதுமாய்…
இருவருக்குள்….
இருப்பதை
கொடுத்து விடுவதால்…
அறுபதிலும் தாம்பத்யம்
தடம் புரளாமல் போகிறது…!!!
ஆக்கம்: கவிஞர்.எல்.இரவி.