“காரணி”அவள் மலடியாயிருந்தபோது திட்டியவர்களோ
பின் தாய்மையடைந்தபோது போற்றியவர்களோ பெண்குழந்தையை பெற்றெடுத்தாளெனதூற்றியவர்களோ…
யாரும் எங்கும் எதற்கும்விமர்சிக்கவேவில்லை
எல்லாவற்றிற்கும் காரணகாரணியான அவள் கணவனை…!

“வருத்தம்”
முதலாவதாய் பிறந்தது
பெண்குழந்தையாய் இருந்திருந்தால் அடிக்காமல்வளர்த்திருப்பேனோ என்னவோ!
மகனை அடித்துவிட்டு வருந்தும் அப்பா!
“ஓவியம்”
இந்த ஓவியங்களையெல்லாம்வரைந்தது யாரென்று கேட்கிறது
விருந்தாளியாய் வந்த குழந்தை!
சுவரிலிருக்கும் கிறுக்கல்களைப்பார்த்து!
“பசி”
சீக்கிரம் சாப்பிட வாருங்களென்று
சொல்லாமல் சொல்கிறாள் அவள் பசியை!
கணவன் உண்டபின் உண்ணும் மனைவி!@@@@@@@@@@@@@@@@@-மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி