
மறுபிறவி..வேண்டுமா(ம்)
கலவையில் உருவாகி
கருவாய் உருமாறி
காரிருளில் பல மாதம்.
குறித்த வேளையில்
குதித்தேன் வெளியே
கூவி அழுதேன்
கொண்டாட்டம் துவக்கம்.
குழவியாய் குதூகலம்
குமரியாய் நகர்வலம்.
குடும்பத் தலைவியென
குழந்தை வளர்ப்பு
கூடிய பொறுப்பு
கரைந்தது நாட்கள்
கூடுவிட்டு பறந்த கிளிகள்
கூரையைப் பார்த்தே
கழிந்தது நாட்கள்..
கைத்தடி ஊன்றல்
கைக்கூப்பி வேண்டல்..
கூப்பிடப்பா என்னை
குரலில் ஏக்கம்..
காணணும் மறுபிறப்பு
கூடொன்று மாறாமல்
குழந்தையாய்ப் பிறக்கணும்
கூடணும்..மீண்டுமிங்கே..
காட்டிடப்பா வழியுமே
காலதாமதமும் ஏனிங்கே?
அகிலா ராமசாமி
பெங்களூர்