அன்பார்ந்த வாசகப் பெருமக்களே! வணக்கம்! அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! சென்ற மாத இணைய இதழை வாசித்து கருத்து பரிமாற்றம் செய்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள். தொடர்ந்து பி.டி.எஃப் வடிவிலேயே வெளியிடுமாறு சிலர் வேண்டிக் கேட்டுக் கொண்டனர். அவர்களுக்கு என்னுடைய பதில் இதுதான்.
பி.டி.எஃ வடிவில் தயாரிப்பது தனி ஒருவனாக எனக்கு மிகுந்த சிரமம் தருகின்றது. அதோடு மட்டுமில்லாமல் தகுந்த சாப்ட்வேர் இல்லாமல் வேர்ட் பைலாக தயாரிக்கையில் கண்ணை உறுத்தும் வகையில் இருப்பதாக சிலர் சொல்கின்றனர். கடந்த இரண்டு வருஷங்களாக இந்த பி.டி.எஃ இதழை நடத்தி வருகிறேன். போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. விளம்பரங்களோ சந்தாக்களோ இல்லாமல் எந்தவித பிரதிபலனும் இல்லாமல் என்னுடைய உழைப்பு வீணானதோடு கண்பார்வையிலும் குறைபாடு ஏற்பட்ட்தால் தற்சமயம் பி.டி.எஃ இதழை வெளியிட இயலாது.
ஆனால் உங்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தியாக தீபாவளிக்கு முன்பாக சுமார் 80 பக்கத்தில் ஒரு தீபாவளிமலரை பி.டி.எஃ ஆக தனி இதழாக வெளியிடும் ஒரு யோசனை இருக்கிறது. நவம்பர் 14க்கு முன்னரோ அல்லது நவம்பர் 14 அன்றோ அந்த இதழ் நமது இணையதளத்தில் வெளியிடப்படும். ஆனால் இந்த மாத இதழை தொடர்ந்து இணைய இதழாகவே நடத்துவதாக திட்டமிட்டுள்ளேன்.
தீபாவளிமலருக்கான உங்கள் படைப்புகளை வெகுசீக்கிரம் அனுப்பி வைக்கலாம். மலரில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், ஜோக்ஸ் நிறைந்திருக்கும். சிறுவர்களுக்கான பக்கங்களும் உண்டு. எனவே அதற்கேற்றார் போல உங்கள் படைப்புகளை நவம்பர் 5ம் தேதிக்குள் அனுப்பி வையுங்கள். அதற்கு பிறகு வரும் படைப்புகள் ஏற்கப்பட மாட்டாது.
மேலும் தேன்சிட்டு இதழுக்கு படைப்புகளை மெயிலில் மட்டுமே அனுப்ப வேண்டும். வாட்சப் மூலம் வரும் படைப்புகள் இனி தேர்ந்தெடுக்கப்பட மாட்டாது. தேன்சிட்டு இணைய இதழில் என்னென்ன மாற்றங்கள் புதுமைகள் செய்யலாம் என்பதை தெரியப்படுத்துங்கள்! தேன்சிட்டு என்றும் உங்களோடு சிறகடிக்க உறுதுணையாக இருங்கள். நன்றி. அன்புடன். நத்தம். எஸ்.சுரேஷ்பாபு.
தேன்சிட்டு இணைய இதழ். நவம்பர்- 2020
கூடு 2 தேனி- 3
கதைகளில் வரும் இடங்கள், சம்பவங்கள், பெயர்கள் அனைத்தும் கற்பனையே!
படைப்புகளை சுருக்கவும் திருத்தவும் ஆசிரியருக்கு உரிமை உண்டு.
உங்கள் படைப்புகளை thalir.ssb@gmail.com என்ற மின்ன்ஞ்சலுக்கு பிரதிமாதம் 10ம் தேதிக்குள் அனுப்பி வையுங்கள்.
படைப்பு தேர்வானால் பிரசுரமாக ஒருமாதகாலம் வரை பொறுத்திருக்கவும்.
தேன்சிட்டுக்கு அனுப்பும் படைப்புகளை மற்ற மின்னிதழ்களுக்கோ அச்சிதழ்களுக்கோ ஒரு மாதம் வரை அனுப்பவேண்டாம். படைப்பு தேர்வானது குறித்த தகவல் அனுப்ப இயலாது. நீங்கள் படைப்பு அனுப்பி ஒருமாதம் வரை உதாரணமாக அக்டோபர் 10ம் தேதி அனுப்பிய படைப்பு நவம்பர் 10வரை பிரசுரம் ஆகவில்லையெனில் தேர்வு பெறவில்லை என்று கருதவும்.
படைப்பு அனுப்பி விட்டு வாட்சப், முகநூல், அலைபேசி மூலம் தொடர்புகொண்டு விசாரிப்பதை தவிர்க்கவும்.
தற்சமயம் தேன்சிட்டில் பிரசுரமாகும் படைப்புகளுக்கு சன்மானம் எதுவும் வழங்க இயலா நிலையில் உள்ளோம். சன்மானம் எதிர்பார்ப்பவர்கள் படைப்புகளை அனுப்ப வேண்டாம்.
மெயிலில் மட்டுமே படைப்புகளை அனுப்ப வேண்டும். வாட்சப், மெசெஞ்சர் போன்றவற்றில் வரும் படைப்புகள் நிராகரிக்கப்படும்
ஆசிரியர்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு
வடிவமைப்பு: எஸ்.எஸ்.பி. வடிவமைப்பில் உதவி: எஸ்.ஏ.ராதா.
முகவரி: தேன்சிட்டு மின்னிதழ். 73. நத்தம் கிராமம், பஞ்செட்டி அஞ்சல், பொன்னேரி, வட்டம், அ.கு.எண். 601204
அலைபேசி: 9444091441
வாசகர்களின் விருப்பத்திற்காக இந்த இதழ் பிடிஎஃ வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.